திருவாரூர்

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 60 பேர் கைது

DIN

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி கொரடாச்சேரியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 60 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததாலும், பருவ மழைப் பொய்த்ததாலும் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சம்பா, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரடாச்சேரி பகுதி விவசாயிகள் கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2012-2013-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடுத் தொகை செலுத்தியிருந்த நிலையில், அந்த ஆண்டு ஏற்பட்ட சாகுபடி பாதிப்புக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கொரடாச்சேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை கண்டித்தும் அப்பகுதி விவசாயிகள் 60 பேர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT