திருவாரூரில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அகில இந்திய தலைவர் சோமசுந்தரதீட்சிதர், ஆட்சிமன்றக்குழு தலைவர் சுப்பிரமணிய சிவாச்சாரியார், அகில இந்திய பொதுச் செயலர் முத்துக்குமார சிவாச்சாரியார், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சாமிநாத சிவாச்சாரியார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.
சிவாச்சாரியார்களுக்கென நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.