திருவாரூர்

சாதாரண மக்களை பாதுகாக்கும் இயக்கம் அதிமுக: அமைச்சர் ஆர். காமராஜ்

DIN

சாதாரண மக்களை பாதுகாக்கும் இயக்கம் அதிமுக என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுகவின் 46-ஆவது தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
அதிமுகவை உருவாக்கிய மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் காலமும், அதிமுகவை இரும்புக் கோட்டையாக  வலுப்படுத்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் காலமும் தமிழகத்துக்கான பொற்காலம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எந்தவொரு சாதி, மத, இன மோதல்கள் ஏற்படவில்லை. சாதாரண மக்களைப் பாதுகாக்கும் இயக்கமாக அதிமுக விளங்கி வருகிறது.
திமுக செயலர் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டுமென்ற கனவு நிறைவேறாது. முதலமைச்சராக வர முடியவில்லையென்ற பதற்றத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பேச்சு பேசிவருகிறார். தமிழகத்தில் ஊழல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததும் திமுகவே.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து திமுக பயப்படுகிறது. தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அப்படியே கொண்டு செல்லப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலும் அதிமுக என்ற இயக்கம் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற்றப்படும் என்றார் அமைச்சர் காமராஜ்.
கூட்டத்தில் அதிமுக நகரச் செயலர் ஆர்.டி. மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT