திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தொடர்பாக நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, நீடாமங்கலம் உழவர் சந்தை எதிரில் சிலர் மது புட்டிகளை காலை 9 மணியளவில் விற்பனை செய்து கொண்டிருந்தனராம். அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், 11 மது புட்டிகள், ரூ. 4,295 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீடாமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், நீடாமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.