திருவாரூர்

நியாயவிலைக் கடை விற்பனையாளர் நேர்முகத் தேர்வு: அழைப்புக் கடிதம் இல்லாதவர்கள் இன்று பங்கேற்கலாம்

DIN

திருவாரூரில் நடைபெற்று வரும் நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில், அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் வியாழக்கிழமை நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்குரிய அழைப்புக் கடிதம், விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அஞ்சல் மூலம் தனித்தனியே அனுப்பப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நேர்முகத் தேர்வு வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.
நேர்முகத் தேர்வுக்குரிய அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் தாமதமாக அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்று, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள இயலாதவர்கள் பிப். 15 -ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து அழைப்புக் கடிதம் பெற்று, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT