திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா

DIN

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் சுமதி,  துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன்,  வார்டன் சிவகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதையடுத்து  மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம்,  இன்னிசை பாடல்கள், மயிலாட்டம்,  ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம்  உள்ளிட்டவை நடைபெற்றன.
மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியும், மாணவியர்  புடவையும் அணிந்திருந்தனர். பின்னர், பொங்கல் வைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவச் செயலாளர்கள், தமிழ்மன்ற செயலாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT