அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இப்பள்ளியில் 250 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் சார்பில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்த, அவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.எஸ். கார்த்திக் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ ப. ஆடலரசன் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக் குழுவினர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.