திருவாரூர் அருகேயுள்ள கடம்பகுடியில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து திருவாரூர் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கடம்பகுடியில் கடந்த ஆண்டு நடைபெற்ற எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமார் தீர்ப்பளித்தார்.