முகப்பு
திருவாரூர்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

திருவாரூர் அருகேயுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 15 மே, 2018 at 1:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருவாரூர் அருகேயுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று, குடும்ப நலம் வேண்டியும், மழை பெய்து நாடு செழிக்க வேண்டியும் திருவிளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.