சந்தானராமர் கோயிலில் அக்.10 முதல் நவராத்திரி உத்ஸவம் தொடக்கம்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில், நவராத்திரி உத்ஸவத்தையொட்டி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ராமபிரான் விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் க. சிவகுமார், ஆய்வாளர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் ரெ. ஐயப்பன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.