திருவாரூர்

புறாக்களைத் திருடிச் செல்ல முயன்ற நால்வர் கைது

DIN

முத்துப்பேட்டை அருகே வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் புறாக்களை திருடிச் செல்ல முயன்ற நால்வரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்த்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது (45). இவர், தனது வீட்டில் விலை உயர்ந்த புறாக்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (20), சாகுல்ஹமீது (35), முத்துப்பேட்டையைச் சேர்ந்த அகமது கபீர் (24), அப்துல் ரகுமான் (20) ஆகிய நால்வரும் அப்துல் ஹமீது வீட்டுக்குள் புகுந்து, 16 புறாக்களைத் திருடிக் கொண்டு, தப்பி செல்ல முயன்றனராம். இதையறிந்த அப்துல் ஹமீது, கூச்சலிட்டதால், அருகில் உள்ளவர்கள் திரண்டு வந்து, நால்வரையும் பிடித்து, முத்துப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, அப்துல் ஹமீது அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அசாருதீன் உள்ளிட்ட  நால்வரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT