சென்னைக்கு 945 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்திலிருந்து சென்னைக்கு 945 டன் நெல் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலத்திலிருந்து சென்னைக்கு 945 டன் நெல் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், அசேஷம் , மூவாநல்லூர், இடையர்நத்தம், தெற்குநத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 945 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வடக்கு மண்டலத்துக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.