தலைமறைவாக இருந்தவர் கைது
முத்துப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த முத்துப்பேட்டை, கல்கேணி தெருவைச் சேர்ந்த அப்துல் மாலிக் (33) என்பவர், அண்மையில் வெளிநாட்டில் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார்அவரை கைது செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அப்துல்மாலிக்கை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதற்காக, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, காவலர் சிவசங்கரன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் பாராட்டுத் தெரிவித்தார்.