பாட்டி நினைவிடத்தில் மலரஞ்சலி
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவராகப் பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக திருவாரூருக்கு மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வருகை தந்தார். கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்ற அவர், அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தந்தை, சகோதரிகள், முரசொலிமாறன் மற்றும் கருணாநிதியின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர்களுமான கே.என்.நேரு, உ.மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.