முகப்பு
தேனி

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி!

சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலியானது குறித்து...

கார்த்தீஸ்வரன் ( 31) - DNS
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சின்னமனூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 1) மாலை பலத்தை சூறாவளிக்காற்று, இடி , மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்மீது மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓடைப்பட்டி காவல்துறையினர், உயிரிழந்த விவசாயியின் உடலை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சின்னமனூர் அருகே கண்ணியம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் கார்த்தீஸ்வரன் (31), தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்து உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

A farmer died on the spot after being struck by lightning in Chinnamanur, located within the Uthamapalayam Town Panchayat in Theni District.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.