மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பசு மாடும் உயிரிழந்தது.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சிராயபாளையம் வெங்கடம்மாபேட்டை சாலையில் வசித்து வருபவா் மணிவண்ணன். இவரது மனைவி ராமாயி (40). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கச்சிராயபாளையம் ஏரியில் மாடு மேய்த்துள்ளாா். அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் மேடு மேய்த்துக் கொண்டிருந்த ராமாயி நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். பசு மாடும் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
Advertisement
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.