முகப்பு
தேனி

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

Updated On : 1 மே, 2026 at 11:32 PM
கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

சின்னமனூா், தெற்குத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (24). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில்அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விவசாயி உயிரிழப்பு: இதேபோல, ஆண்டிபட்டியில் மின்னல் பாய்ந்ததில் தனது 2 மாடுகளுடன் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

ஆண்டிபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, ஆண்டிபட்டி அருகே சித்தையகவுன்டன்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் (60) மழை நின்றதும் தோட்டத்துக்குச் சென்று தனது 2 பசுமாடுகளையும் கொட்டத்தில் அடைக்கச் சென்றாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் 2 மாடுகளும் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, பாண்டியனின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.