பெருகவாழ்ந்தானில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் தூய்மைப் பணி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். முகாமை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் தொடங்கி வைத்தார்.
பெருகவாழ்ந்தான் அண்ணாசிலை சந்திப்பு, கடைவீதி, பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலை, முத்துப்பேட்டை - மன்னார்குடி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் ஆசிரியர் சந்திரசேகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முத்துசிவா, முன்னாள் திட்ட அலுவலர் ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.