மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 127 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மனுக்களை வழங்கி குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரெங்கநாதன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.