முகப்பு
திருவாரூர்

வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 4:58 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 
திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சார்பில், அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், தையலைப் போற்றுவோம் என்ற தலைப்பில் வளர் இளம் பருவ மாணவிகளுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், மதுரை செந்தமிழ் கல்லூரி  பேராசிரியை ரேவதி சுப்புலெட்சுமி பங்கேற்று பேசியது: வறுமை, ஏழ்மை என்பதெல்லாம் படிப்புக்கு ஒரு தடையல்ல. முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் தான் மூலதனம். அது இருந்தால் எல்லாவற்றையும் வென்று படிப்பில் முன்னேறிவிடலாம் என்றார். இதில், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை குமுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம்பருவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.