நிலக்கரி ஏற்றி வந்த லாரி மன்னார்குடியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரைக்காலிலிருந்து கரூருக்கு வியாழக்கிழமை நிலக்கரி ஏற்றிவந்த லாரி, மன்னார்குடி ருக்மணிபாளையம் திரையரங்கம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது. பின்னர் ,பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, லாரி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், சாலையில் கொட்டிக் கிடந்த நிலக்கரி, வேறு லாரியில் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.