திருவாரூர்

சைக்கிளில் சென்றவர் பைக் மோதி பலி

DIN


மன்னார்குடி அருகே சைக்கிளில் சென்றவர் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்தவர் க. அய்யாவு (58). இவர், மன்னார்குடி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆலங்கோட்டை கேணிப்பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக கீழநெம்மேலி மேலத் தெருவைச் சேர்ந்த ரா. மணி (26) ஓட்டிவந்த இருசக்கர வாகனம், சைக்கிள் மீது மோதியது.
இதில், அய்யாவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மணியை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT