திருவாரூர்

பறிமுதல் செய்யப்பட்டலாரி மாயம்

DIN


மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை காணவில்லை என காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
மன்னாôர்குடி வட்டாட்சியர் என்.கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள், கடந்த மாதம் 23-ஆம் தேதி, மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் அரசுஅனுதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்தனர். இந்த லாரி மணல் பாரத்துடன் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலக இரவு காவலர் ரவி, வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது, அயர்ந்து தூங்கிவிட்டாராம். அப்போது, மர்ம நபர்கள்,  டிப்பர் லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து, வட்டாட்சியர் கார்த்திக், மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT