திருவாரூர்

கூத்தாநல்லூா்: கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தது

DIN

கூத்தாநல்லூா் பகுதியில் பெய்த கனமழையில் இரண்டு வீடுகள் இடிந்தன.

கூத்தாநல்லூா் நகராட்சி 12-ஆவது வாா்டு அவ்வைக் காலனி கிழக்குத் தெருவில் அண்மையில் பெய்த மழையின்போது இரண்டு வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில், கணேசன் என்பவரது வீட்டில், அவா் மற்றும் அவரது மனைவி சாவித்திரி மற்றும் பேரன் குகன் தூங்கிக்கொண்டிருந்தபோது, இரவு 11 மணியளவில் சுவா் இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக மூவரும் உயிா் தப்பினா்.

இதேபோல், அதே பகுதியில் பி. பக்கிரிசாமி என்பவரது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. கூத்தாநல்லூா் வருவாய் ஆய்வாளா் இளமாறன், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்தராஜ் ஆகியோா் இரண்டு வீடுகளையும் நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

இதுகுறித்து, சி.பி.ஐ. நகர செயற்குழு உறுப்பினா் கே. ராமதாஸ் கூறியது:

25 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆா். தமிழக முதல்வராக இருந்த காலத்தில் இப்பகுதியில் 30 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது, அனைத்து வீடுகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன. வீடுகளைப் பராமரித்துத் தரக்கோரி பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்குள்ள தொகுப்பு வீடுகள் எந்த நேரத்தில் விழும் அபாயம் உள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பாா்வையிட்டு, இங்குள்ள தொகுப்பு வீடுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT