திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை மா.சா. சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின. சிறுநீர் பாதை தொற்று குறித்து, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் தன்யா, ஆலோசனைகளையும், உரிய மருத்துவ விளக்கங்களையும் அளித்தார்.
நிகழ்ச்சியில் நூலக வாசகர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் ஆண்டாள், அன்னப்பழம், ஆசைத்தம்பி ஆகியோர் செய்திருந்தனர்.