திருவாரூர்

காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

DIN

மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் அண்மையில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மகளிர் கல்லூரி செஞ்சுருள் சங்கம், நுண்ணுயிரியல் துறை மற்றும் மாவட்ட காசநேய் தடுப்பு மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சீ. அமுதா தலைமை வகித்தார்.
மாவட்ட காசநோய் தடுப்பு மைய மருத்துவர் ஜெய் கணேஷ் கார்த்திக் கலந்துகொண்டு காசநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்து மாணவியரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். மாவட்ட காசநோய் தடுப்பு மைய அலுவலர் விஜி தன்னிலை அறிதல் எனும் தலைப்பில் பேசினார். இதைத் தொடர்ந்து, மாணவியர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 
இதில், கல்லூரி துணை முதல்வர் என். உமா மகேஸ்வரி, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT