திருவாரூர்

பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

DIN

கூத்தனூர் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஹயகிரிவ ஸ்ரீவித்யா பூஜை நடைபெற்றது.
நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூரில் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. மாணவ - மாணவியர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு பெற வேண்டியும் இக்கோயிலில்,1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீ சரஸ்வதி அம்மனை வேண்டி ஸ்ரீஹயகிரிவ ஸ்ரீ வித்யா பூஜை நடைபெற்றது.
இப்பூஜையில் மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரும், கல்லூரி மாணவ, மாணவியரும் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட்டனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இப்பூஜைக்கான ஏற்பாடுகளை சாய் பந்துகள் மற்றும் பூந்தோட்டம் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT