திருவாரூர்

இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் திருட்டு

DIN

நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில், ரூ. 71 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பாபு. இவர் நீடாமங்கலம்- தஞ்சை சாலையில், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். வழக்கம்போல், கடந்த 2-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க தகர கொட்டைகையை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து, கடையில் வைத்திருந்த ரூ.71 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாலமுத்தையா மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT