திருவாரூர்

ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை மேற்கொள்ள விடமாட்டோம்

DIN

ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை மேற்கொள்ள விடமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் எடுக்க 2-ஆவது  மண்டலமாக திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியை மையமாகக் கொண்டு, 494 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே விவசாயிகள், பொதுமக்கள் இந்த திட்டங்களால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டங்களையும் தமிழகத்தில் வர விடமாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் எந்த பணியையும் மேற்கொள்ள விடமாட்டோம்.
பொங்கல் பரிசை பணக்காரர்களுக்கு வழங்காவிட்டால் அந்த தொகையையும் சேர்த்து ஏழைகளுக்கு பிரித்து கொடுக்கலாம். தலைவர்கள் ஓரிடம், மக்கள் ஓரிடம் என இருக்கும் நிலையில் நேரடியாக  மக்களை சந்திப்பது ஆரோக்கியமான ஒன்று. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் ஊராட்சி சபை மூலம் மக்களை சந்தித்து வருவது சிறப்பான திட்டமாகும். எந்த தேர்தலையும் சந்திக்க தைரியம் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையும் தள்ளிவைத்தால் நல்லது என்று கூட அவர்கள் எண்ணக்கூடும் என்றார் கே. பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT