நீடாமங்கலம் வட்டம், வீரவநல்லூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச உத்ஸவம் திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, காலை 8 மணியளவில் கணபதி ஹோமும், சத்ருசம்ஹாரதிரிசதி ஹோமமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் குத்துவிளக்கு பூஜையும், 6 மணிக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவீரவநல்லூர் சுப்பிரமணியசுவாமி பக்த ஜனசபா அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.