கூத்தாநல்லூர் வட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா
கூத்தாநல்லூர் வட்டத்துக்கு உள்பட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டத்துக்கு உள்பட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
மரக்கடை கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில் எழுந்தருளியுள்ள பழனியப்ப சுவாமி, கம்பர் தெருவில் வள்ளி, தெய்வானை உடனாகிய முருகன், நீலகண்டேசுவரர் கோயில், சேகரை முருகன் கோயில், அதங்குடியில் உள்ள வள்ளி, தெய்வானை உடனாகிய செந்தில்வேலன், வக்ராநல்லூரில் மீனாட்சி உடனுறை சுந்தரேசுவரர், சியாமளா தேவி அம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் ஆறுமுக சுப்ரமணிய சுவாமி, காக்கையாடி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முருகனுக்கு அரிசி மாவு, விபூதி, சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.