திருவாரூர்

மு.க. ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 40 பேர் கைது

DIN

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கண்டித்து, அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 40 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சட்டப் பேரவையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோரது உருவ பொம்மைகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் தெற்கு மாவட்டத் தலைவர் ரஞ்சித் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலர் ஆரோக்கிய செல்வம், தெற்கு மாவட்டச் செயலர் ரஜினிபாண்டியன், நகரச் செயலர் பாவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT