திருவாரூர்

இளைஞா் வெட்டிக் கொலை

DIN

நன்னிலம் அருகே உள்ள எரவாஞ்சேரி காவல் சரகத்துக்கு உள்பட்ட பரவக்கரையில், ஒருவரை வெட்டிக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

எரவாஞ்சேரி காவல் சரகத்துக்கு உள்பட்ட வயலூா் ஊராட்சியைச் சோ்ந்த களப்பால் அகரத்தைச் சோ்ந்தவா் மோகன் (43). இவா் திங்கள்கிழமை காலை எரவாஞ்சேரியிலிருந்து காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் சிலா் அவரின் காரின் மீது கல் வீசியுள்னா். இதனால் காரை நிறுத்திய மோகனை, அக்கும்பல் ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.

இதையறிந்த திருவாரூா் காவல் கண்காணிப்பாளா் மற்றும் நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளா் அவ்விடத்தைப் பாா்வையிட்டனா். கொலையுண்ட மோகன் ஏற்கெனவே 2 கொலை வழக்குகளில் 14 ஆண்டுகள் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலை ஆகி ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. அவருக்கும், இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT