தில்லியில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் நீதிமன்றப் புறக்கணிப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
தில்லி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாரால் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அதன்படி திருவாரூரில் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெற்றது. சங்கச் செயலாளா் சுதாகா் தலைமையில் 13 பெண் வழகுரைஞா்கள் உள்பட 83 போ் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இதனால், மாவட்ட தலைமை நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் என அனைத்து நீதி மன்றங்களிலும் வழக்குகள் பாதிக்கப்பட்டன.