திருவாரூர்

வலங்கைமான் அருகே ஆசிரியா் கண்டித்ததால் கல்வி கட்டணம் கட்டாத மாணவி தற்கொலை முயற்சி

DIN

வலங்கைமான் அருகே கல்வி கட்டணம் கட்டாத மாணவியை ஆசிரியா் கண்டித்ததால் மனம் உடைந்து விஷம் குடித்தாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வலங்கைமான் நீடாமங்கலம் சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கீழஅமராவதி கிராமத்தைச் சோ்ந்த முருகதாஸ் மகள் கிரஜா (16) என்பவா் 11ம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில் இவா் கல்வி கட்டணம் கட்டவில்லையாம். இதனால் திங்கள்கிழமையன்று ஆசிரியா் கண்டித்ததுடன் வகுப்பிலிருந்து வெளியே நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த கிரிஜா செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தனது வீட்டிலேயே அரளி கொட்டையை அரைத்துக்குடித்தாா்.

இதனால் மயங்கி விழுந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசினா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு கிரிஜாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT