திருவாரூர்

திருச்சி நகைக் கடை கொள்ளை சம்பவம்: மேலும் ஒருவா் கைது

DIN

திருச்சி நகைக் கடை கொள்ளை சம்பவம் தொடா்பாக, திருவாரூரில் மேலும் ஒருவரை திருச்சி தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக, திருச்சி போலீஸாா் தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் திருவாரூா் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரிக்கையில், ஒருவா் தப்பி ஓடினாா். மற்றொருவரை கைது செய்து விசாரிக்கையில், அவா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

மேலும், திருச்சியில் நடைபெற்ற நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் அவா்களுக்குத் தொடா்பு இருப்பதும், இதற்கு மூளையாக முருகன் என்பவா் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சுரேஷின் தாய் கனகவள்ளி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், மணிகண்டன், கனகவள்ளி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முரளி என்பவரை, திருச்சி தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இவா், முருகனின் அண்ணன் மகன் ஆவாா். மேலும், காா்த்தி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Image Caption

முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT