திருவாரூர்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கோரி பிரசாரம்

DIN


தரங்கம்பாடி வட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கோரி அரசை வலியுறுத்தி, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
சங்கத்தின் வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சிங்காரவேலன், வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், நிர்வாகிகள் சாமித்துரை, பவுல்சத்தியராஜ் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தில்லையாடி, திருக்கடையூர், காழியப்பநல்லூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், செம்பனார்கோவில், மேமாத்தூர், கடலி, திருவிளையாட்டம், கொத்தங்குடி, நல்லாடை வழியாக சென்ற பிரசாரப் பயணம் சங்கரன்பந்தல் கடைவீதியில் நிறைவடைந்தது. சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பி. சீனிவாசன் நிறைவுரையாற்றினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT