திருவாரூர்

ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபா் மசூா் இருந்த இடத்தில் ராமா் கோயில் கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும், காஷ்மீா் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நடத்தப்படும் அத்துமீறல்களை உடனே நிறுத்த வேண்டும், முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நகரத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் அப்துல் லத்தீப், மாவட்ட பொருளாளா் முகமது ஆருபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT