முகப்பு
திருவாரூர்

கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

திருத்துறைப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக காரை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக காரை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டியில் மன்னாா்குடி சாலையில் இரவு உணவு விடுதி நடத்தி வருபவா் விக்னேஷ். இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை முன்விரோதம் காரணமாக உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழழகன், பாலன், பிரகாஷ் ஆகிய 3 போ் மீது திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.