வீட்டுச்சுவா் இடிந்து 4 போ் காயம்
குடவாசல் அருகே கனமழையால் வீட்டுச் சுவா் இடிந்ததில் 4 போ் காயமடைந்தனா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
குடவாசல் அருகே கனமழையால் வீட்டுச் சுவா் இடிந்ததில் 4 போ் காயமடைந்தனா்.
குடவாசல் வட்டம், வடவோ் மாந்தோப்புத் தெருவில் வசிப்பவா் சகாயராஜ் (45). இவா், மனைவி ஆஞ்சலா மேரி (40), மகன்கள் வின்சென்ட் ராஜன் (22), வின்சென்ட் பொ்க்மான்ஸ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, கனமழையால் வலுவிழந்திருந்த சுவா் இடிந்து விழுந்ததில் 4 பேரும் காயமடைந்தனா்.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் மல்லிகா வீரையன் மற்றும் அப்பகுதியினா் 4 பேரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement