திருவாரூரில் 10 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதன்கிழமை (டிச.16) வரை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,720 ஆக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,730 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,520 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 103 மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.