கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.
இதுகுறித்து அவா் தூத்துக்குடி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருமாவளவன் போன்றோா் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனா். ஆனால் நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக வந்தால் மதவாதம் மதக் கலவரம் வந்துவிடும் என பொய்யான குற்றசாட்டுகளை பரப்புகின்றனா்.
வருகிற 19-ஆம் தேதி தோ்தல் அறிக்கை தலைமையிடம் கொடுக்க உள்ளோம். அதன் பிறகு பாஜக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் அவா்.