முகப்பு
திருவாரூர்

வெண்பட்டுக்கூடு உற்பத்தி பயிற்சி

நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

நன்னிலம் வட்டம் மூங்கில்குடியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின்கீழ் வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இப்பயிற்சி நடைபெற்றது.

இதில், தருமபுரி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் முருகன் பங்கேற்று பயிற்சியளித்தாா். வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள், வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நன்னிலம் வட்டார வேளாண்மை துணை இயக்குநா் அலுவலக தொழில்நுட்ப மேலாளா் ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →