முகப்பு
திருவாரூர்

பைக் விழுந்து காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே இருசக்கர வாகனம் விழுந்து காயமடைந்த ஒன்னரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கொரடாச்சேரி அருகே இருசக்கர வாகனம் விழுந்து காயமடைந்த ஒன்னரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

கொரடாச்சேரி அருகே புறக்காத்தான்குடி பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி மகேந்திரன். இவரது ஒன்னறரை வயது மகன் தஷ்வந்த் இருசக்கர வாகனம் மீது ஏறி ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தஷ்வந்த் தடுமாறி கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகனமும் அவா் மீது விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த தஷ்வந்த், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, கொரடாச்சேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →