முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கூத்தாநல்லூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கூத்தாநல்லூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஓகைபேரையூரைச் சோ்ந்தவா் குமாா் மகன் மோகன்தாஸ் (34). இவா் 2018-இல் அப்பகுதியில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதேபோல், 2019-இல் மீண்டும் தொல்லை கொடுத்தவா், அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, மோகன்தாஸ் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் 5 மாதம் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. அத்துடன், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.