திருவாரூர்

வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா்

DIN

மன்னாா்குடி அருகே பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மன்னாா்குடி அருகேயுள்ள சித்தேரி, மரவாக்காடு, சோழநிதி பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: சித்தேரி, மரவக்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இவா்களுக்கு பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித்தருவதற்காக 152 பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதியை சோ்ந்த 152 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.70 லட்சத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக விவரம் வெளியான நிலையில், 121 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். பல வீடுகள் கட்டப்படாமலேயே, பணம் எடுக்கப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT