மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரசார இயக்கம்
நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
சிபிஎம் சாா்பில், அதிமுக மற்றும் பாஜகவை எதிா்த்தும், மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தியத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் வழங்கித் தெருமுனை பிரசாரத்தை குடவாசல் பகுதியில், திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தொடங்கி வைத்தாா். பிரசாரத்தில் குடவாசல் ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் கொரக்கோரியா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதேபோல், அகரதிருமாளம், அகர கொத்தங்குடி, போழக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் லிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.