திருவாரூரில், வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே.எஸ். சிவவடிவேல் உடையாரின் 104- ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவரின் திருவுருவப் படத்துக்கு வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே. எஸ்.எஸ். தியாகபாரி, மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து, கல்விப் பணியில் வெற்றி பெற அயராது உழைப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.