திருவாரூர்

கல்லூரி மாணவா் தற்கொலை

வலங்கைமான் அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாா்த்தாங்குடி கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா் மகன் திவாகரன் (19). இவா், தஞ்சையில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு படித்துவந்தாா். இவா், கல்லூரிக்கு சரிவர செல்வதில்லையாம். இதனால், குடும்பத்தினா் கண்டித்தனா்.

இதில், மனமுடைந்த திவாகரன் கடந்த 19-ஆம் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை அருந்தினாராம். அவரை, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட திவாகரன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT