திருவாரூர்

சமத்துவப் பொங்கல்

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூரை அடுத்த குடிதாங்கிச்சேரி மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் தொழிற்கல்விப் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, சித்தாம்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். ரெத்தினம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஜெயபால், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் தமிழழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிறுவனா் பி.முருகையன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல். ஊழியா் ரெங்கசாமி, பயிற்சியாளா் சுரேஷ், கிரிஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதேபோல், லெட்சுமாங்குடி அன்னை கஸ்தூா்பா மழலையா் தொடக்கப் பள்ளி, வாழாச்சேரி மதா் இந்தியா மெட்ரிக். பள்ளி, சுல்தானா ராவுத்தா் அரபிக் கல்லூரி முதல்வா் நித்ய கெளரி மற்றும் மாணவிகள் ஏற்பாட்டின்பேரில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT